/* */

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார் .

HIGHLIGHTS

ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்
X

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன்உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில்மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா உடனிருந்தார்.

நிகழ்ச்சிக்குபின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிராண வாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மணிநேரத்திற்கு 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிட்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் தேவைஅதிகரிக்கும் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் இருந்தால் நோயாளிகளை பாதுகாக்க மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் குறுகிய காலத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். அதேபோல்இன்று நீதிமன்ற பணியாளருக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முழுக்க முழுக்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. தேர்வு வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

அதேபோல் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் கேட்டார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. நளினியும்,முருகனும் உடல்நிலை சரியில்லை என்று கேட்டுக் கொண்டாலும் அல்லது அவர்கள் உறவினர்கள் யாரேனும் அவர்களுக்காக பரவலுக்கு மனு செய்தால் அது குறித்து அரசு பரிசீலனை செய்து முடிவு செய்யும் என்றார்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், அரசுமருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் திமுக நகர கழக நைனாமுகமது, பாலு உள்ளிட்டதொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 31 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!