/* */

புதுக்கோட்டை: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே, மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை திட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தேசிய ஊரக வேலை உறுதித் சட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இதில் பணியாற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை ஜாதி வாரியாக பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி செய்வதாக, விவசாயத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, இம்முயற்சியை அரசு கைவிடக்கோரி, புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...