/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காந்தி சிலை முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த சைக்கிள் பேரணியானது காந்தி சிலையில் இருந்து துவங்கி கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேரணி வந்தடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 13 July 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!