/* */

உதகையில் தவக்கால பரிகார பவனி: ஏராளமான மக்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில் தவக்கால பரிகார பவனி நடைபெற்றது.

HIGHLIGHTS

உதகையில் தவக்கால பரிகார பவனி: ஏராளமான மக்கள் பங்கேற்பு
X

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில் நடைபெற்ற தவக்கால பரிகார பவனி.

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில், தவக்கால ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் பொருட்டு தவக்கால பரிகார பவனி நடைபெற்றது.

தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ், டஸ்டேட் வங்கி, அரசு ஆஸ்பத்திரி சாலை, மேரிஸ் ஹில் ரோகிணி சந்திப்பு, காந்தல் முக்கோணம் வழியாக குருசடி திருத்தலம் வரை சென்றது. பவனியில் இயேசு வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார்.

கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி நடந்து சென்றார்கள். காந்தல் குருசடி திருத்தலத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

உலகில் நிலவும் உக்ரைன், ரஷ்யா போரில் அமைதி நிலவ வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், பங்கு தந்தைகள் அமிர்தராஜ், ஸ்தனிஸ், செல்வநாதன், பெனடிக்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 3 April 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  2. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  7. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  8. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்