/* */

யோகா ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்க கோரிக்கை

உதகையில் யோகாவில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

யோகா ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்க கோரிக்கை
X

பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

உதகையில் பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்களின் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கண்ணன் மற்றும் பொதுச்செயலாளர் காசிநாததுரை ஆகியோர் கூறுகையில், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டயம் முடித்த யோகா ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் என பல்வேறு துறைகளில் யோகாவில் பயிற்சி முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 8ஆம் தேதி அன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் சரஸ்வதி, ராஜேஷ் மற்றும் யோகா ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!