/* */

மதுபோதையில் வாகனம் ஓட்டிய மதுவிலக்கு பிரிவு காவலர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மதுவிலக்கு பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

HIGHLIGHTS

மதுபோதையில் வாகனம் ஓட்டிய மதுவிலக்கு பிரிவு காவலர்
X

மதுவிலக்கு பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளவர் மெல்வின். இவர் குன்னூரில் உள்ள ஆய்வாளரை வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணிக்கு அழைத்து வருவதற்காக மாலை ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சென்றுள்ளார்.

மெல்வின் அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்தது. இதனால் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மெல்வினை மீட்டு பி1 காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும்அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக காவலர் மெல்வினை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவிட்டார்.

Updated On: 30 April 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...