/* */

குன்னூர் காட்டேரி அணையில் குதித்து பெண் தற்கொலை

தீராத தலைவலி தொடர்ந்து இருந்து வந்தததால் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

குன்னூர் காட்டேரி அணையில் குதித்து பெண் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட பெண்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி அணை அருகே உள்ள தூரட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் வயது 54 . இவரது மனைவி புஷ்பா வயது 45. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூரட்டி அருகே உள்ள காட்டேரி அணைக்கு சென்ற புஷ்பா, அணையை கடந்து செல்லும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புஷ்பா தண்ணீரில் குதித்ததை நேரில் பார்த்த சிலர் கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்குள் தண்ணீரில் மூழ்கி விட்டார். நீண்ட நேரம் கழித்து அவரது உடல் பாலத்தின் ஓரத்தில் தலைகீழாக மிதந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் இதுகுறித்து லவ்டேல் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்குள் அங்கு கிராம மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புஷ்பாவிற்கு தீராத தலைவலி தொடர்ந்து இருந்து வந்தததால் தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.


Updated On: 1 Sep 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா