/* */

குன்னூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

குன்னூரில் 21 மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 750 மாற்றுதிறனாளிகள் உள்ளனர். இவர்களில், மாவட்டத்தில் பல்வேறு தாலுக்காவில் உள்ள மாற்றுதிறனாளிகள், மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குன்னூர் அரசு மருத்துவமனையில் திறன் உதவியாளர் விஜயன் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் அவர்களை முழுமையாக பரிசோதித்தபின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நகரப்புறம் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த 21 மாற்றுதிறனாளிகள் புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டனர்.

இதில் பல்நோக்கு உதவி மறுவாழ்வு அலுவலர் சண்முக மூர்த்தி, மருத்துவர்கள் நித்யா, தமிழ்ச்செல்வன், ரம்யா, கிருஷ்ணராஜ், கண் பரிசோதகர் மாணிக்கவாசகம் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.

Updated On: 21 July 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு