/* */

குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள் உலா- பழங்கள் சேதம்

குன்னூரில், அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் புகுந்த யானைக் கூட்டம், அன்னாசி பழங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தின.

HIGHLIGHTS

குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள்  உலா- பழங்கள் சேதம்
X

நீலகிரி மாவட்டத்தில் ஜுன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு வகையான பழங்களின் சீசன் களைகட்டும். குறிப்பாக பலாப்பழம், பேரிக்காய், பச்சை ஆப்பிள், மங்குஸ்தான் போன்ற பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. இதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் குன்னூருக்கு படையெடுக்கும்.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணையில், தடுப்புகள் மற்றும் மின்வேலிகளை உடைத்து உள்ளே சென்ற காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த அன்னாசி பழங்கள், உருளைகிழங்கு மற்றும் முள்ளங்கி போன்றவற்றை முழுமையாக சேதப்படுத்தின.

மேலும் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்‍கும் உலா வரும் யானை கூட்டங்களை கண்காணிப்பதற்காக, வனத்துறை சார்பாக தனி குழு அமைக்கப்பட்டு, யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டியடிப்பதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.

Updated On: 20 July 2021 2:06 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...