/* */

ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம்

வையப்பமலை அருகே, தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தக்கோரி, பொதுமக்கள் நடு ரோட்டில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டம்
X

வையப்பமலை அருகே, நடு ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரில் உருளுதண்டம் போட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு தாலுக்கா வையப்பமலை அருகே குப்பிச்சிபாளையம் பஞ்சாயத்தில் உள்ளது செக்காரப்பட்டி கிராமம். இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், தெருக்களில் மழைநீர், குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் சுகதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே பஞ்சாயத்திலும், பல்வேறு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், செக்காரப்பட்டி பொதுமக்களை ஒன்றிணைத்து, தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். பின்னர், சேறும் சகதியுமான தெருவில் உருளுதண்டம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேங்கி நின்ற தண்ணீரில் சோப்பு போட்டு குளித்தனர்.

இந்த நூதன போராட்டத்திற்கு, சிபிஐ (எம்) கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், பூபதிமுருகன் ரமேஷ், பிஏசிபி இயக்குனர் மாரிமுத்து, எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். தகவல் கிடைத்ததும் அங்கு வந்த பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், உடனடியாக பணிகளை தொடங்கி மழைநீரை அகற்றி புதிய சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தை முடித்து கலைந்து சென்றனர்.

Updated On: 24 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...