/* */

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு

எருமப்பட்டி அருகே 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த  கட்டிட மேஸ்திரி சாவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிப்பட்டி பஞ்சாயத்து, தோட்டக்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி ( 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று, பெரியசாமி எருமப்பட்டி அருகே பாலப்பட்டி செல்லும் ரோட்டில் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது 2-வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதனால் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  3. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  4. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  5. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  10. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு