Begin typing your search above and press return to search.
பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
பரமத்தி அருகே கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிந்தார்.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் தாலுக்கா, நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). விவசாயி. அவர் நேற்று மாலை, நாமக்கல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, அவருக்கு முன்னால் தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றது. பஸ் டிரைவர் இடதுபுறமாக பஸ்சை திரும்ப முயன்றார். அப்போது முருகேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்