Begin typing your search above and press return to search.
பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
பரமத்திவேலூரில் என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, நாமக்கல் பிஜிபி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி என்சிசி மாணவர்கள் இணைந்து நடத்திய அமைதி மற்றும் ஒற்றுமை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மற்றும் பேரணி பரமத்தி வேலூரில் நடைபெற்றது.
கந்தசாமி கண்டர் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தாவரவியல்துறை பேராசிரியர் ராஜூ, என்சிசி அலுவலர்கள் சங்கர், சிவக்குமார், பெரியசாயபு, ராஜ பிரபு ஆகியோர் நிழ்ச்சியில் பேசினார்கள். திரளான என்சிசி மாணவர்கள் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.