/* */

தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தனியார் பள்ளி ஆசிரியை திருமணம் செய்ய வற்புறுத்தி காரில் கடத்திச் சென்ற இளைஞருக்கு மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

HIGHLIGHTS

தனியார் பள்ளி ஆசிரியை கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

திருச்செங்கோடு அருகே ஆத்தூராம்பாளையம், அவரைக்காட்டைச் சேர்ந்தவர் சுதா (24), தனியார் பள்ளி ஆசிரியை. திருச்செங்கோடு சன்னியாசிபட்டி கிராமத்தைச் சேர்ந்த, அவரது உறவினரான விவசாயி சீனிவாசன் (29) என்பவர் தன்னை திருமணம் செய்யக்கோரி சுதாவை வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், கடந்த 2009ம்ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி சுதாவை, சீனிவாசன் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியை சுதாவை கடத்திய சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஆசிரியை சுதாவை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கடத்திய சீனிவாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

Updated On: 27 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது