விபத்து வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்
Accident Case - வழக்கு விசாரணையில் ஆஜராகி சாட்சி சொல்ல, தற்போது விழுப்புரத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் செல்வராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
HIGHLIGHTS
Accident Case -நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). அவர், 2019ம் ஆண்டில், நாமக்கல்–சேலம் ரோட்டில், பொன்நகர் பகுதியில் ரோட்டைக் கடக்கும்போது, அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, அப்போதைய, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கு, நாமக்கல் ஜேஎம்1 கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் ஆஜராகி சாட்சி சொல்ல, தற்போது விழுப்புரத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் செல்வராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் சாட்சி சொல்ல கோர்ட்டிற்கு வரவில்லை. அதையடுத்து, மாஜிஸ்திரேட்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜூக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2