/* */

ஆரணி அருகே போலீஸ் என கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த நபர் கைது

ஆரணி அருகே போலீஸ் என கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே போலீஸ் என  கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த நபர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த என்.கே.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன் (வயது 25), பொக்லைன் டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் 5-ந் தேதி மாலை வெட்டியாந்தொழுவம் காட்டுப்பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வில்வநாதன் மற்றும் அவருடன் இருந்த நண்பர்களை பார்த்து ஏன் இந்த பக்கம் வந்தீர்கள் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நான் யார் தெரியுமா?, நான் போலீஸ் எனக்கூறி வில்வநாதனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதனை வில்வநாதனின் நண்பன் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் வில்வநாதன் வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலீஸ் என மிரட்டல் விடுத்தவர் பையூர் பகுதியை சேர்ந்த பெருமாள், கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2022 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’