/* */

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்

Vehicle Seized- விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

Vehicle Seized- விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் கண்ணாந்தல் கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் லாரியுடன் நின்றிருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேலூர் தென்னமர வீதியை சேர்ந்த மோகன் மகன் குமரேசன்(வயது 27) என்பதும், கண்ணாந்தல் கிராமத்தை சேர்ந்த சகாயம் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...