/* */

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி

தமிழ்நாடு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி
X

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுபோட்டி நடத்தப்பட்டது.

தமிழகத்துக்கு தமிழ்நாடு என, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டிய, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட அளவில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 27 பேரும், கட்டுரைப்போட்டியில் 26 பேரும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சாந்தி, நாராயணமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 8 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  3. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் எவை தெரியுமா?
  10. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...