/* */

காவிரி ஆற்றில் தண்ணீர் திருடுவதைத் தடுக்க ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை

காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி குழாய் அமைத்து தண்ணீர் திருடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் தண்ணீர் திருடுவதைத் தடுக்க ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை
X

காவிரி ஆற்றில் தண்ணீர் திருடுவதை தடுக்கக் கோரி, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்தனர்.

இது குறித்து, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே வடகரையாத்தூர், திருச்செங்கோடு அருகே மொளசி கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நீரேற்றுப் பாசனக் கிணறு அமைத்துள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் இந்த நீரேற்றுப் பாசனக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் ஊறும் தண்ணீரை மட்டுமே சங்கத்தினர் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. எனினும், மேற்குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நீரேற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் பாசனக் கிணற்றில் இருந்து காவிரி காவிரி ஆறு வரை நிலத்துக்கடியில் குழாய் அமைத்து தண்ணீர் திருடுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் ராஜா, கொமாரபாளையம், மோகனூர் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். எனவே சட்ட விரோதமாக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அவர் கோரியுள்ளனர்.

Updated On: 19 July 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...