Begin typing your search above and press return to search.
மாநில டேக்வாண்டோ போட்டியில் நேஷனல் பப்ளிக் பள்ளி சாதனை
Namakkal news- மாநில அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- கொங்கு சகோதயா கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான டேக்வான்டோ விளையாட்டுப் போட்டி, தர்மபுரியில் நடைபெற்றது.
சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர். நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். 12-வயதிற்கு உட்பட்ட குழு பிரிவில் இப்பள்ளி மாணவி தன்ஷேதா மாநில அளவில் முதலிடமும், மாணவர் சஸ்மித் இரண்டாம் இடமும் பெற்றனர்.
மாநில அளவில் சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மணவிகளை நேஷனல் பப்ளிக் பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர், மேல்நிலை வகுப்பு முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.