/* */

நாமக்கல்: விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து விதைக்க ஆலோசனை

Farmer Meeting Today -நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து விதைக்க ஆலோசனை
X

பைல் படம்.

Farmer Meeting Today - நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் விதைப்பரிசோணை நிலையவேளாண் அலுவலர் சரண்யா கூறியுள்ளதாவது:- விவசாயத்தில் மிக முக்கிய பங்குவகிக்கும் இடுபொருள் விதையாகும். அதிக மகசூல் பெற, தரமான விதை உபயோகிப்பது மிக முக்கியமாகும். தரமான விதை என்பது பாணீசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். உழவர்கள் தங்கள் விளை நிலங்களில் இருந்து பெறப்பட்ட தானிய வகை விதைகள், பயறு வகை விதைகள் மற்றும் எண்ணெய்வித்து போன்ற விதைகளை, விதைக்காக சேமிக்கும்பொழுது அதன் தரத்தினை அறிந்து சேமிக்க வேண்டும். விதையின் தரம் என்பது முளைப்புத்திறன் புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவைகளாகும். இதற்கான பரிசோதனைகள் விதைப் பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நாம் உபயோகிக்கும் விதைகளுக்கு பயிர் வாரியாக தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட விதைகளாக இருந்தாலும், விதைப்பதற்கு முன் தரப்பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தங்களிடமுள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும், உற்பத்தி செய்யும் உண்மை நிலை விதைகளையும், விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து தரமான விதைகளையே பயன்படுத்தவேண்டும். நாமக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.80 வீதம் விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் பிற ரக கலப்பு ஆகிய பரிசோதனைகளை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  8. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  9. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே