/* */

மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மோகனூர் அருகே வீடு கட்டப்பணம் இல்லாததால் விரக்தியடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் பஞ்சாயத்து, சங்கரம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (53). இவருக்கு சவுந்தரராஜன், இளையராஜா, விமல்ராஜ் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். சிங்காரவேலு, அவருடைய மனைவி மற்றும் 3 மகன்கள் என 5 பேர் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டில் 5 பேரும் ஒன்றாக வசிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், வீடு கட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் வீடு கட்ட போதிய பண வசதி இல்லாமல் அவர்கள் தடுமாறி வந்தனர். இதனால் சிங்காரவேலுவின் 2வது மகன் இளையராஜா (22) கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா, நேற்று வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயில் பகுதியில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிக் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மோகனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இளையராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Jun 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...