நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் வருகிற 5-ம் தேதி மின்நிறுத்தம்
Puthansanthai-நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் வருகிற 5-ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Puthansanthai-புதன்சந்தை பகுதியில் வருகிற 5ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும்.இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 5ம் தேதி வெள்ளிக்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி காராக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2