/* */

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவின் முதல் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில் நகராட்சி , டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறங்களில் இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் எவரும் இல்லை என்பதை கண்டறிவது, மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு பணியாளர்களை பணியமர்த்துவதை தவிர்த்தல், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் பணியாளர்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக மறுவாழ்வு குறித்து ஆராய்தல், சட்டத்திற்கு புறம்பாக மனித கழிவுகளை அகற்றும் பணியில் எவரேனும் ஈடுபடுத்தப்படுவது குறித்தோ, அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர் குறித்தோ எழுந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி மற்றும் நலக்குழு உறுப்பினர்கள், அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...