/* */

நாமக்கல்: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே, கார் மோதியதால் டூ வீலரில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்பு
X

நாமக்கல் அருகே, கார் மோதியதால் டூ வீலரில் சென்ற டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் முதலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு புதன்சந்தையில் இருந்து நாமக்கல் நோக்கி டூ வீலரில் வந்து கொண்டிருந்தார். பாப்பிநாயக்கன்பட்டி அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கார், அவரது டூ வீலரில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  4. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  6. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  8. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  10. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு