Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். நாமக்கல் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட துணை செயலாளர் செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் அரசு விஜயன், மாநில ஆசிரியர் அணி துணை செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. திரளான கட்சி நிர்வாகிகள் மற்றம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.