நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு காெலை மிரட்டல்: வாலிபர் கைது
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்துக்குள் புகுந்து எச்.எம்ஐ மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்துக்குள் புகுந்து எச்.எம்ஐ மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வலையபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று மதியம் 12.40 மணிக்கு, வளையபட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரவின் (20), ஆம்புலன்ஸ் டிரைவரான அவர், தனது டூ வீலரில் அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் வேகமாக சென்றார்.
அப்போது, பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணி (59), அவரை நிறுத்தி பள்ளிக்குள் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, நான் பள்ளிக்கு வருவேன், போவேன் அதைக் கேட்க நீ யார் எனக்கேட்டு, தரக்குறைவாகவும், தகாத வார்த்தையாலும் திட்டி உள்ளார். மேலும், தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது குறித்து, தலைமையாசிரியர் சுப்ரமணி, மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.