Begin typing your search above and press return to search.
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை
புதுச்சத்திரம் அருகே, அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா (40), அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று மாலை, அவர் நாமக்கல்லில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தூசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொசவம்பட்டி நால்ரோடு பகுதியில், பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு, டூ வீலரில் வந்த 3 பேர், கண்டக்டர் செந்தில்ராஜாவை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து செந்தில்ராஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.