/* */

விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் தேமுதிக சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள்விழா ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலர் சிவசுப்ரமணி பேசினார். 

ஆண்டுதோறும் தே.மு.தி.க. சார்பில் ஆக. 25ல் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட, நகர, வார்டு செயலர்கள், ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நகர செயலர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலர் சிவசுப்ரமணி பங்கேற்று ஆலோசனை வழங்கினார். விழாவில் கட்சியின் கொடியை அனைத்து வார்டுகளிலும் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள், முக கவசங்கள், கபசுர குடிநீர், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துதல், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்குதல், ஆதரவற்ற, ஏழை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்கான அயர்ன் பாக்ஸ், டைலரிங் மெசின் வழங்குதல், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்தவர்களை கவுரவப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மகாலிங்கம், மணியண்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Updated On: 5 Aug 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...