/* */

குமாரபாளையம் காளியம்மன் கோவில் விழாவில் இரண்டாவது நாள் தேரோட்டம்

குமாரபாளையத்தில் காளியம்மன் திருக்கல்யாணம், மற்றும் தேர்த்திருவிழா இரண்டாவது நாளாக நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காளியம்மன் கோவில் விழாவில் இரண்டாவது நாள் தேரோட்டம்
X
குமாரபாளையம் காளியம்மன்கோவில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.

குமாரபாளையத்தில் காளியம்மன் திருக்கல்யாணம், மற்றும் தேர்த்திருவிழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13 பூச்சட்டுதலுடன் துவங்கியது. மறு பூச்சாட்டு, கொடியேற்றம், தேர்க்கலசம் வைத்தல், சக்தி அழைத்தல், மகா குண்டம் இறங்குதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. நேற்று காலை காளியம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.


காலை 10:00 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் வீதி, வழியாக வந்து புத்தர் வீதியில் நிறைவு பெற்றது. இன்று மீண்டும் இரண்டாம் நாள் தேரோட்டமாக இந்த இடத்திலிருந்து துவங்கி கோவில் வளாகத்தில் நிலை சேரும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை வேண்டிக்கொண்டு, தேர் மீது வாழைப்பழங்கள், காசுகள் வீசினர். வழியெங்கும் சாலையை பக்தர்கள் தண்ணீர் ஊற்றி தூய்மை படுத்தியும், வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், மலர்கள் தூவியும் அம்மனை வரவேற்றனர். இரண்டாம் நாள் தேரோட்டம் நிறைவு பெற்றதும் வான வேடிக்கை நடைபெறும். அடுத்தநாள் மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெறும்.

நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், பாட்டு மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Feb 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  2. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  3. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  5. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  7. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  8. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  10. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...