/* */

பொங்கல் பண்டிகை: குமாரபாளையம் மார்க்கெட்டில் மக்கள் வெள்ளம்

பொங்கல் பண்டிகையையொட்டி, குமாரபாளையம் மார்க்கெட்டில், பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகை: குமாரபாளையம் மார்க்கெட்டில் மக்கள் வெள்ளம்
X

குமாரபாளையம் சந்தையில், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள். 

பொங்கல் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான மஞ்சள் கொம்பு, கரும்பு, பூஜை பொருட்கள், பூக்கள், வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்க தினசரி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.

மஞ்சள் கொம்பு ஒன்று 25:00 ரூபாய்க்கும், கரும்பு ஒன்று 50:00 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. பூக்கள் விலை, காய்கறிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆயினும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதால் விலை உயர்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

நாளை மாட்டுப்பொங்கல் என்பதால் மாட்டுக்கு தேவையான கயிறு வகைகள், சலங்கை பெல்ட்டுகளை விவசாயிகள் பெரும்பாலோர் குமாரபாளையம் மார்க்கெட்டில் வாங்கிச் சென்றனர். சாலையோர துணிக்கடைகளில் ஏழை, எளிய மக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தங்கள் குழந்தைகளுக்கு ஜவுளிகளை ஆர்வமுடன் வாங்கினர்.

Updated On: 14 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்