/* */

துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது

குமாரபாளையம் துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது செய்யபட்டார்.

HIGHLIGHTS

துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் சேலம் சாலையில் ஜவுளிகடை நடத்தி வருபவர் பழனியப்பன், 43. இவர் காலை 9, மணியளவில் தனது கடையை திறந்தபோது, ஒரு நபர் வந்து துணி வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். பழனியப்பன் சற்று காத்திருங்கள் என்று கூறி, சுத்தம் செய்யும் பணியை செய்ய துவங்கியுள்ளார். அதற்குள் அந்த நபர் கடையின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்ததை பழனியப்பன் கவனித்து, சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்தனர். அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனில் பழனியப்பன் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெயர் ராஜசேகர்,38, என்பதும், ஈரோடு, காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பழனியப்பன் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து, திருடிய பணம் ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.
Updated On: 18 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!