/* */

குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு

குமாரபாளையம் கடைகளில், ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு; அபராதம் விதிப்பு
X

குமாரபாளையம் கடைகளில் ஆய்வு செய்து நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள், நகரில் உள்ள வணிக நிறுவங்களில் ஆய்வு செய்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்களிடம் மூவாயிரம் ரூபாயும், விதி முறைகளை பின்பற்றாத 3 வணிக நிறுவனங்களில் ஆயிரத்து 500 ரூபாயும் என, மொத்தம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், கொரோனா விதிமுறைகளை அரசு கூறியபடி அனைவரும் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அனைவரும் முகக் கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆய்வு தினமும் தொடரும் என்றார்.

Updated On: 7 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!