/* */

'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்': குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி

'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள். நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி அடைந்தார்.

HIGHLIGHTS

என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்:  குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி
X

குமாரபாளையம் தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்தே சென்று நேரில் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார்.நேற்று பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியிலும், காவேரி ஆர்.எஸ் பகுதிக்கும் சென்றார். அப்போது அப்பகுதி பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர், சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா அவர்கள் மத்தியில் கூறியவதாவது, ' தொகுதியில் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தருவேன். தகுதியானவர்களுக்கு முத்ரா திட்டம், NEEDS திட்டங்களின் மூலம் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து தருவேன். நான் தொகுதிக்கு கொடுத்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். என் வாக்குறுதிகள் கல்லில் எழுதிய எழுத்துக்கள்.' என்று உறுதி அளித்தார்.

பொதுமக்கள் தரப்பில், 'உங்களைப் பற்றியும், உங்கள் குடும்ப பின்னணிப்பற்றியும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் என்னென்ன சேவைகளை செய்துள்ளீர்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களின் தாத்தா ஜே.கே.கே.நடராஜா அவர்கள் தொழில் துறையிலும், கல்வித்துறையிலும் செய்த சேவைகள் மறக்க முடியாதது.

அதேபோல நீங்கள் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நிறைய செய்ததும் எங்களுக்கு தெரியும். அதனால், எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று உறுதியாக கூறினார்கள்.

Updated On: 30 March 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்