/* */

சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

பவானி அருகே சித்தோட்டில் வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சித்தோடு பகுதியில் வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
X

பவானி அருகே, சித்தோடு பழைய பரோடா வங்கி அருகே வசிப்பவர் செல்வி, 37. கட்டிட கூலித்தொழிலாளி. இவர் தன்து கணவர் அய்யாசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, சித்தோட்டில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். செல்வியுடன் அவரது மகள்கள் அபர்ணா, 17, தாரணி, 13 ஆகியோரும் உள்ளனர்.

செல்வியின் இளையமகள் தாரணி, நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில், தனது தோழியை சந்தித்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த ஆவின் வாகனம் தாரணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தாரணி, சம்பவ இடத்தில் பலியானார்.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பவானி சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன், எஸ்.ஐ. வடிவேல்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Sep 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு