/* */

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தாசில்தார் பங்கேற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தாசில்தார் பங்கேற்றார்.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுடன், நாமக்கல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, வருவாய்த்துறை சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தனர். போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி, ஒழிப்போம் ஒழிப்போம் போதை பொருட்களை ஒழிப்போம், காப்போம் காப்போம் உயிர்களை காப்போம் என கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக மாணவ, மாணவியர் சென்றனர் .

போதை பொருட்கள் ஒழிப்பு,மற்றும் போதை பொருட்களை உட் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கல்லூரியில் நிறைவு பெற்றது. 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், வி.ஏ.ஒ. முருகன், உள்ளிட்ட பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா வழிகாட்டுதலில், துறை பேராசிரியை சரவணாதேவி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வாசவி கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆய்வு செய்தல் அவசியம். இதில் தகவல் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இதற்கு கணினி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு விஷயம் குறித்து மேலும் மேலும் தகவல் சேகரிப்பது தான் ஆய்வு என்பது. புதிதாக மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த ஆய்வின் மூலம் புதிய முடிவெடுக்க உதவியாக உள்ளது. இந்த ஆய்வை வணிக நிர்வாகவியல் மாணவர்கள் அடிப்படையாக மேற்கொள்ள வேண்டும். மனித வளம், நிதி மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர்கள் காயத்ரி, கல்யாணி, மோத்தி, பார்த்திபன், அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 13 March 2024 11:48 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!