Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே பலத்த காற்றினால் வாய்க்காலில் உடைந்து விழுந்த மரம்
குமாரபாளையம் அருகே பலத்த காற்றினால் மரம் ஒன்று உடைந்து வாய்க்காலில் விழுந்தது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியதால், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் கரையோரமாக இருந்த பெரிய மரம் ஒன்று உடைந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது, உடைந்து விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.