/* */

வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி

திருமங்கலம் அருகே, காட்டுப்பன்றியை கொல்வதற்காக வைக்கப்பட்ட மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி
X

கருப்பசாமி 

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி வயது (19 ); இவர், உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு புல்லுக்காக தோட்டத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

கருப்பசாமி உறவினர்கள் பல இடங்களில் தேடிச்சென்று பார்த்தபோதும், கருப்பசாமி காணவில்லை. பின்னர், தோட்டத்தின் அருகே விழுந்து கிடந்ததை கண்டறிந்தனர். உறவினர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர் .அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல், மக்காச்சோளம் பயிரில் சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை கொல்வதற்காக, மின்சார வயர் மூலம் மின் வேலி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார வேலியில் சிக்கி கருப்பசாமி இறந்து விட்டதாக கூறி, சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி, உறவினர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம், திருமங்கலம் காவல் துறை கண்காணிப்பாளர் சிவகுமார் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இறந்த வாலிபர் கருப்பசாமி உடலை திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுுக்கு அனுப்பினர். இதனிடையே, மின்வேலி பொருத்திய சக்திவேல் என்பவரை, திருமங்கலம் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 29 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!