/* */

முதல்வருக்கு வந்த திடீர் தேச பக்தி: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

முதலமைச்சர் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது என்றார்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

HIGHLIGHTS

முதல்வருக்கு வந்த திடீர் தேச பக்தி: பாஜக தலைவர்  அண்ணாமலை  விமர்சனம்
X

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் நீலகிரி எம்பி ராஜா மற்றும் முதல்வர் ஆகியோர் பிரிவினைவாதத்தை பற்றி பேசியதை நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் மேலும் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீலகிரி எம்.பி. ராஜா மற்றும் முதல்வர் ஆகியோர் பிரிவினைவாதத்தை பற்றி பேசியதை நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்தனர். முதலமைச்சர் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பாஜக ஆளாத அரசு கூட வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது ,தமிழக அரசு ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார்.

பாஜகவிற்கு திடீரென தேச பக்தி வந்திருக்கிறது என , முதல்வர் குற்றம் சாட்டுகிறார். பாஜகவின் உடைய குற்றச்சாட்டு திமுகவிற்கு தேச பக்தி கிடையாது என்பது முதல்வர் கண்ணாடி சுவருக்குள் உட்கார்ந்து கல் எறிவது போன்று இன்னொருவர் மீது எறிவது முன்பு அவர் கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை உணர வேண்டும்.

செருப்பு வீசுவது சிலைகளுக்கு அவமானப்படுத்துவது இதுதான் பாஜகவின் உடைய ஆயுதம் என துரைமுருகன் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு:பாஜக இதுவரை எந்த ஒரு சிலைகளையும் சேதப்படுத்தவில்லை, பாஜக மாநிலத் துணைத் தலைவர் இராமலிங்கம் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பாரத அன்னை என்ற ஆலயம் உருவாக்கியுள்ளார். அனுமதி பெற்று ஊர்வலமாக பாரத அன்னைக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றனர்.

கோவிலை திறந்து வைத்த அரசு அதிகாரி அனுமதி கொடுத்த பிறகு அங்கு இல்லை.ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்ற பிறகு அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்ததால் அங்கே கூடியிருந்த தொண்டர்கள் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்றனர். அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் பாஜகவினர் உள்ளே சென்றிருக்க மாட்டார்கள்.

திமுகவினர் அனுமதி கொடுத்துவிட்டு, பாஜகவை கூட்டத்தை கண்டு திமுகவினர் அச்சப்படுவர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், காவல்துறையினர் அலைபேசியில் விடுத்து மிரட்டுவார்கள் இதுதான் நேற்று நடந்த சம்பவம்.நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பாஜக சார்பில் அனுமதி பெற்று கலந்து கொண்டேன்.

கைது செய்யப்பட்ட கே.பி .ராமலிங்கம் அண்ணனுக்கு இது புதிது அல்ல ,இது போன்ற கைதுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அஞ்சப் போவதில்லை.பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தின் காரணமாகத்தான் பாஜகவில் சேர்ந்தேன் என சரவணன் கூறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு:இது குறித்து எனக்கு தெரியாது யார் தலைமை யார் அழுத்தம் கொடுத்தார்கள்? யார் அதை செய்ய சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது, இது பற்றி சரவணன் தான் சொல்ல வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கட்டும்.முன்னாள் மதுரை பாஜக மாவட்டத் தலைவர் கட்சியை விட்டு சென்ற பிறகு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.அவர், தேர்ந்தெடுத்த பாதை ஒன்றும் புதிதல்ல அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் தேசியக்கொடி பொருத்தப்பட்ட காரில் வருகை தரும் பொழுது திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காரில் கல்லை எறிந்தார்கள்.அப்போது திமுக என்ன கூறினார்கள் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள் என தெரிவித்தனர்.

பாஜகவினரின் நேற்று செய்த செயலால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர் கேள்விக்கு:அரசியல் கட்சிகளில் தலைவர் சரியான வழியில் நடக்காத போது, குறிப்பாக நேற்று நிதியமைச்சர் சரியாக நடக்காத போது தொண்டர்களுக்கு உணர்ச்சிகள் வரத்தான் செய்யும் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தலைவருக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர். தொண்டர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறினார்கள்.நேற்று, அதுதான் நடந்தது. இதனால் பாஜக சார்பில் தொண்டர்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அவர்களது, தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு பாடம்.

தமிழக மக்கள் தேசிய கொடியேற்றுவது குறித்த கேள்விக்கு:தமிழகத்தின் மிகப்பெரிய அளவிற்கு தேசியம் உள்ளது அதற்காக வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றி தான் தேசியத்தை காக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு உகந்தது இல்ல ,அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது என்னுடைய கருத்தும் கூட. தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு,இளைஞருக்கு, வயது குறைவானவர்களுக்கு ஒரு பாரம்பரியத்தை ஊட்டி வளர்க்கக்கூடிய நிலை உள்ளது.

இதுவே, இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. அதேதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கிராம ,பட்டி ,தொட்டி எங்கும் தேசத்தினுடைய ஒற்றுமையை நிலை நாட்ட தேசிய கொடி வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பிரிவினைவாதத்தைப் பற்றி பேசக்கூடிய திமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டி உள்ளனர்.

தமிழக மக்கள் எப்போதும் தேசியத்தின் பக்கம் தான் உள்ளனர்.தமிழக மக்களுக்காக மத்திய அரசு 25 லட்சம் கொடி கொடுத்துள்ளது. எந்த அரசியல் கட்சியை இதுவரை கொடுத்துள்ளது என, கேள்வி எழுப்பினார். மக்களாகவே தாமாக முன்வந்து பல இடங்களில் தேசியக் கொடியை வாங்கி உள்ளனர் .பாஜகவினர் கொடியை ஏற்றுங்கள் என, கூறவில்லை ஏற்ற வைக்கிறோம். வரும் காலங்களில், தேசியத்தின் வளர்ச்சி தமிழகத்தில் அதிகரிக்கும். பாஜக என்றும் தொண்டர்கள் பக்கம் தான் தொண்டர்களால் இயங்கக்கூடிய கட்சி பாஜக என்றார் அண்ணாமலை.

Updated On: 16 Aug 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...