சோழவந்தான் பேரூராட்சி மன்ற மாதாந்திரக் கூட்டம்
Council Meeting- பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளில் நடைபெறும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
HIGHLIGHTS
Council Meeting- சோழவந்தான் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சித்தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் லதா கண்ணன், செயல் அலுவலர் சுதர்சன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்தியபிரகாஷ் டாக்டர் எம் மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி, முத்தையா, சிவா, குருசாமி, குத்தாலம் செந்தில், செல்வராணி ,சதீஷ் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், நிஷா கௌதம ராஜா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில், பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2