/* */

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் விவசாயி அடித்துக் கொலை

மதுரை அலங்காநல்லூரில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது உருட்டுக்கட்டையால் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்

HIGHLIGHTS

வயலுக்கு தண்ணீர்  பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் விவசாயி அடித்துக் கொலை
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சமயநல்லூரில் உள்ள வயலூர் பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி மருதுபாண்டி (55). இவரது வயல் அருகே சுரேஷ் (34) என்பவரது வயல்வெளியும் அருகே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் இடையே கடந்த நான்கு நாட்கள் முன் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், தகராறு முற்றியதால், சுரேஷ் உருட்டு கட்டையால், மருதுபாண்டியனை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மருதுபாண்டியன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மருதுபாண்டியன் உயிரிழந்தார். உயிரிழந்த சம்பவத்தை அறிந்த சுரேஷ் தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீஸார் சுரேஷ் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 28 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...