/* */

மதுரை மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாமில் ஆணையர் ஆய்வு

மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாமில் ஆணையர் ஆய்வு
X

பைல் படம்.

மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை நகரில் 178 இடங்களில் தினசரி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மதுரையில் 31 மாநகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை, புதூர் மற்றும் செல்லூரில் நடந்த முகாமை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் கார்த்திகேயன் திடீரென ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறியதாவது: மதுரை நகரில் தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் 178 இடங்களில் நடத்தப்படுவதால், தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படுவதால், நோயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றார்.

ஆய்வின்போது, மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 20 Jun 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...