/* */

தேசிய தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்ட வீரர் சிதம்பரம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார்

HIGHLIGHTS

தேசிய தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
X

 42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்குபெற்று பதக்கங்கள் வென்ற போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்த மதுரை மாவட்ட எஸ்பி வீ.பாஸ்கரன்

தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் வாழ்த்து தெரிவித்தார்,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் 42 -ஆவது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்ட சிதம்பரம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், தங்கப் பதக்கமும், தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

அதேபோல், முருகேசன் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.மேலும், ராஜா, ஈட்டி எறிதல் போட்டியில், தங்கப் பதக்கமும் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் பெற்றார். மேற்படி, 42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்குபெற்று மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த பதக்கம் பெற்ற நால்வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். நால்வரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன் இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

Updated On: 11 May 2022 12:57 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!