Begin typing your search above and press return to search.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 பேர் உயிரிழப்பு
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 பேர் உயிரிழப்பு
மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் தனசேகரன்( 40 .). இவர் வீட்டின் முதல் மாடியில் சென்றபோது தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது விளாங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(57.) இவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கூடல்நகர் விளாங்குடி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலமாக அடிபட்ட அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.