/* */

சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் சாவு

சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் சாவு
X
பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி டி.கே.நகரைச் சேர்ந்தவர் பஸ்லூன். இவரது மகள் முஸ்கான். இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சமீர் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீர் இன்று தனது மனைவியுடன் சூளகிரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார்.

பின்னர், குடும்பத்துடன் சேர்ந்து சமீர் சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு சென்றார். அணையில் ஒரமாக சமீர் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பஷ்லூன், சமீரை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கியதை கண்ட குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸார், மீன்பிடிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய 2 பேரையும் சடலங்களை மீட்டனர். மேலும், சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?