/* */

மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்

HIGHLIGHTS

மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
X

துவரை நாற்று நடவினை வேளாண்மை இயக்குநர் நடவு செய்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. இதற்கு வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சியில் மண்ணின் வகைகள், அதன் முக்கியத்துவம், உரங்களின் பயன்பாடு, இயற்கை வேளாண்மை முறை, தென்னையில் பூச்சி கட்டுப்பாடு ஆகியவை செயல் விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டது.

விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை மூலம் விதையின் முக்கியத்துவம் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன் கண்காட்சி மூலமாக விளக்கி கூறினார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை மற்றும் ஐ.சி.ஏ.ஆர். மற்றும் கே.வி.கே. மூலம் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கண்காட்சி மூலம் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, விவசாயிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சிகள் நேர்முகமாக நடத்த இயலாத காரணத்தால் பயிற்சி முழுமை அடையாத நிலையில் இருந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் இனி வரும் காலங்களில் பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் அதிக அளவில் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, துவரை நாற்று நடவினை இயக்குநர் நடவு செய்து துவக்கி வைத்தார்.

கூட்டத்தில், பேசிய வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Aug 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  8. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  9. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  10. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...