/* */

கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடகாவிற்கு கடத்த இருந்த   ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார், தொட்டிநாயக்கனப்பள்ளி கூட் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பிக்அப்-ஐ போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் நிற்காமல் வேனை தூரமாக சென்று நிறுத்தி விட்டு அருகில் உள்ள மலைக்கு தப்பி ஓடி விட்டார்.

உடனே, போலீசார் அந்த வண்டியை சோதனை செய்த போது, அதில், 1,000 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த அரிசி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...