Begin typing your search above and press return to search.
தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதேசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வயிற்று வலி குணம் அடையாததால் மனமுடைந்து காணப்பட்ட மாதேசன், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது மனைவி ராஜம்மாள் கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.