சேமித்த ரூ.4100 பணத்தை கொரோனா நிவாரணமாக வழங்கிய 12ம் வகுப்பு மாணவி..!
காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி 4100 ரூபாய் சேமிப்பு பணத்தை கொரோனா நிதியாக டி.ஆர்.ஓ.விடம் வழங்கினார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் முதல் அலையில் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில், இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதியை வழங்கி வருகின்றனர்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் சந்தாபுரம் பஞ்சாயத்து பூமாலை நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் முத்துலட்சுமி, நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் நான்கு ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேர்ந்து வந்தார். தற்போது அதிகரித்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிக்கு பலர் நிதி கொடுத்து வருவதால், தன்னுடைய உண்டியல் பணம், 4,100 ரூபாயை வழங்க முடிவெடுத்தார்.
இதை தனது தந்தைக்கு தெரிவித்து இருவரும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு டி.ஆர்.ஓ., சதீஷிடம், தான் சேர்த்து வைத்த பணத்தை உண்டியலுடன் வழங்கினார். தனது சேமிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பிளஸ் 2 மாணவியை டி.ஆர்.ஓ, பாராட்டினார். இதே போன்று பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை கொரோனா தடுப்பு பணிக்கு வழங்க வேண்டும் என்று அம்மாணவி கேட்டுக் கொண்டார்.
#Instanews #tamilnadu #krishnagiri #கொரோனாநிதி #12ம் வகுப்புமாணவி #சேமிப்பு #நன்கொடை #காவேரிப்பட்டணம் #இன்ஸ்டாநியூஸ் #கிருஷ்ணகிரி #தமிழ்நாடு #savings #12th #12th_student #proudmoment