/* */

கரூரில் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற 3 பேர் கைது

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கரூரில் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க   முயன்ற  3 பேர் கைது
X

கரூரில் சோதனைச்சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய ௩ பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சாலையில் செல்ல அனுமதிக்காத போலீசார் மீது மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீயிட்டு வீசிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே 20 இரவு கரூர் திருமாநிலையூர் சோதனை சாவடியில் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளை கரூர் நகர் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்து பலரையும் திருப்பி அனுப்பினர்.

அன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து திருமாநிலையூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் மீது வீச முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள மின் கம்பியின் மீது பட்டு கீழே விழுந்தது. வீசிய நபர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று மாலை திருமாநிலையூர் பகுதியைச. சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தபோது, அவர்களில், ராமமூர்த்தி, கதிரேசன் பிரசாந்த்குமார் ஆகியோர் போலீசாரின் மீது திட்டமிட்டு பெட்ரோல் குண்டு தயாரித்து வீசியதை ஒப்புக்கொண்டனர்இதனையடுத்து பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் மூவரையும் கைது செய்தனர். மேலும் ஜெயசூர்யா என்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 22 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு